search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே மாநில அளவிலான தொடர் கபடி போட்டி
    X

    மாநில அளவிலான தொடர் கபடி போட்டி நடைபெற்றபோது எடுத்தபடம். 

    உடுமலை அருகே மாநில அளவிலான தொடர் கபடி போட்டி

    • உடுமலை அடுத்த போடிபட்டியில் மாநிலம் தழுவிய தொடர் கபடி போட்டி நடைபெற்றது.
    • நேற்று முன்தினம் தொடங்கிய போட்டி நேற்று இரவு வரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த போடிபட்டியில் மாநிலம் தழுவிய தொடர் கபடி போட்டி நடைபெற்றது. போட்டிகளை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொடக்கி வைத்தனர்.நேற்று முன்தினம் தொடங்கிய போட்டி நேற்று இரவு வரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது.போட்டியில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் வருகை தந்திருந்தனர். மழை வருவது போல் இருந்ததால் கொட்டகை அமைக்கப்பட்டு செயற்கை ஆடுகளத்தில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வீரர்கள் ஆக்ரோசத்துடன் சீறிப்பாய்ந்து சென்று எதிர் அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர். பார்வையாளர்கள் விசில் அடித்தும் கைதட்டியும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் பரிசாக ரூ. 20ஆயிரம் 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம் , 3-ம் பரிசாக 10 ஆயிரம், 4-ம் பரிசாக 7ஆயிரமும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.போட்டிக்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து இருந்தனர். உடுமலை சுற்று ப்புற பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் கபடி போட்டி நடைபெற்ற வருவதால் விளையாட்டுக்கள் மீதான ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    Next Story
    ×