சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சொத்து வரி செலுத்தலாம் - காங்கயம் நகராட்சி அறிவிப்பு

சனி - ஞாயிறு விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும்.சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

காங்கயம்:

காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

காங்கயம் நகர பொதுமக்கள் காங்கயம் நகராட்சிக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பொதுமக்கள் மேற்கண்ட சொத்து வரியை செலுத்துவதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காங்கயம் நகராட்சிப் பகுதி மக்கள் சொத்து வரியை வரும் 30 -ந் தேதிக்குள் செலுத்தி பயனடையவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com