search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே கைத்தறி நெசவாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்
    X

     உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள்.

    உடுமலை அருகே கைத்தறி நெசவாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்

    • நெசவுத் தொழில் மூலப்பொருட்களான பட்டு நூல் மற்றும் ஜரிகை போன்றவை விலை நிலையாக இல்லாமல் அதிக ஏற்றம் இறக்கமாக இருக்கிறது.
    • கைத்தறி சேலைகளின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கிராமத்தில் கைத்தறி நெசவாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க கோரி விநாயகர் கோயில் முன்பு ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரதம் இருந்தனர். இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது;- தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பாரம்பரிய தொழிலாக கைத்தறி நெசவுவு தொழில் உள்ளது. இந்த தொழிலை நம்பி பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது நெசவுத் தொழில் மூலப்பொருட்களான பாட்டு நூல் மற்றும் ஜரிகை போன்றவை விலை நிலையாக இல்லாமல் அதிக ஏற்றம் இறக்கமாக இருக்கிறது. கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலை ரகங்கள் அனைத்தும் விசைத்தறிகளில் கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி மிக அதிகமாக தயாரிக்கப்படுகிறது. இதனால் கைத்தறி சேலைகளின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. கைத்தறி நெசவாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து மிக வறுமை நிலையில் இருக்கின்றனர்.

    இந்த நிலையில் இருந்து அவர்களை மீட்க வலியறுத்தி ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நெசவாளர்களுக்கு என தாலுகா வாரியாக தனி வங்கி ஏற்படுத்த வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறியீடுடன் 11 விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது.பார்டர் டிசைன் உடன் கூடிய பருத்திச் சேலை, பட்டுச்சேலை, கோராப்பட்டு வேட்டி, துண்டு, லுங்கி, ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக்கூடாது. 2007ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை நடைமுறையில் இருந்து வந்த கைத்தறி நெசவாளர் நலன் காப்பீடு திட்டம், மருத்துவ அட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்றனர். இதில் குரல்குட்டை வாளவாடி, இராமே கவுண்டன்புதூர் , மலையாண்டிபட்டினம், பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×