என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளியில்  தியாகி சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி
    X

    நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஊத்துக்குளியில் தியாகி சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி

    • இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தியாகி சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
    • தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகாவில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தியாகி சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் மாவட்ட பொருளாளர் மணியன், எம்.தொட்டிபாளையம் தாலுகா செயலாளர் பிரகாஷ், நடுப்பட்டி ராசப்பன், கரைப்பாளையம் கருப்புசாமி, ராமசாமி, அம்பேத்கர் நகர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதேபோல் ஊத்துக்குளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா கமிட்டி அலுவலகத்தில் தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ஆர்.எஸ். கிளை செயலாளர் சிவசாமி, பாலமுரளி, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×