என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதி திராவிட மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி
    X

    ஆதி திராவிட மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

    • அனிமேஷன் மற்றும் டேலி போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
    • 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒருபட்டப்படிப்பு முடித்தவராக இருத்தல் வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)வழியே 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தகவல்தொழில் நுட்பம் சார்ந்த அனிமேஷன் மற்றும் டேலி போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

    முன்னணி பயிற்சி நிறுவனங்கள் வழியே பயிற்சி வழங்கி வேலைவா ய்ப்புபெற்று தர வழிவகை செய்யப்ப ட்டுள்ளது. இப்பயிற்சியினை பெற 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒருபட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களாகஇருக்க வேண்டும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகாலமாதாந்திர ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வு பெறலாம்.இப்பயிற்சியினை பெற 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இப்பயிற்சியினை பெற WWW.tahdco.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் .

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503, 5 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604. செல்போன் எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421-2971112 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×