என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    தாராபுரம் பகுதியில் நாளை மின்தடை

    • காலை 9 மணி முதல் மதி–யம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • 3 துணைமின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட மூலனூர், கன்னிவாடி, கொளத்துபாளையம் ஆகிய 3 துணைமின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    அதன்படி மூலனூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதியான அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கன்னிவாடி துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதியான மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×