search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் - மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி
    X

    தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றக் காட்சி.

    பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் - மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி

    • நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
    • கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் வீரராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிறகு, தீயணைப்பு பணியாளர்களால் வெள்ள அபாய பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, தீப்பற்றிய இடத்தில் இருந்து மக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி செயல்விளக்கம் அளித்தனர்.

    மேலும் காட்டு தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், அபாய வெள்ள பேரிடர் காலத்தில் எவ்வாறு தத்துரூபமாக காப்பாற்ற வேண்டும் என்று செயல்முறை விளக்கமாக பயிற்சியளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தீயணைப்பு மாவட்ட அலுவலர், திருப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன், திருப்பூர் மாவட்ட தீயணைப்பு பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவச் செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, மதுகார்த்திக், செர்லின், தினேஷ்கண்ணன், சபரிவாசன் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×