search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது சப்- கலெக்டரிடம் விவசாயி புகார்
    X

    கோப்புபடம்

    லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது சப்- கலெக்டரிடம் விவசாயி புகார்

    • விவசாய நிலம் 4 ஏக்கர் கேத்தனூரில் உள்ளது.
    • கூடுதலாக லஞ்சம் கேட்பதாகவும் அவர் கூறினார்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் திருப்பூர் சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்லடம் அருகே உள்ள மந்திரி பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி சப் - கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம், கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மற்றும் நில அளவையர் ஒருவர் மீது லஞ்ச புகார் அளித்தார்.இது குறித்து சப் - கலெக்டரிடம் கண்ணீர் மல்க அவர் கூறியதாவது:-எனக்கு சொந்தமான விவசாய நிலம் 4 ஏக்கர் கேத்தனூரில் உள்ளது. அந்த நிலத்தை சர்வே செய்து அளந்து கொடுக்குமாறு கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து மனு கொடுத்துளேன். லஞ்சம் கேட்டு பல்வேறு காரணங்களை கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இறுதியாக லஞ்சம் கொடுத்து, கடந்த மாதத்தில் நில அளவீடு பணி நடைபெற்றதாகவும்,தற்போது மீண்டும் கூடுதலாக லஞ்சம் கேட்பதாகவும் அவர் கூறினார்.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சப்- கலெக்டர் இது குறித்து விசாரணை செய்வதாகக் கூறினார். இதனால் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×