என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
உடுமலையில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து
- நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டி உள்ளதால் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.
- இச்செய்தியை உடுமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.
உடுமலை:
உடுமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமூர்த்தி நகர் தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாலும் முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டி உள்ளதாலும் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் உடுமலை நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






