search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது வழக்கு
    X

    கோப்புபடம்

    பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது வழக்கு

    • 52 கார்டுகள் கொண்ட சீட்டு கட்டு மற்றும் ரூ. 850-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அவினாசி:

    அவினாசி போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவினாசி ராயம்பாளையம் ரோட்டில் சங்கமம் குளம் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக மடத்துப்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 37), காந்திபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (52), தேவராயம்பாளையம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (43), மோகன் (46), முகமது யாசிக் (34), திருமுருகன் பூண்டி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (60), கருமாபாளையத்தைச் சேர்ந்த சித்திக் (47) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகள் கொண்ட சீட்டு கட்டு மற்றும் ரூ. 850-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×