என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடத்தில் தம்பதிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
- இளம் தம்பதியினருக்கு, குழந்தை பேறு, குழந்தை வளர்ப்பு முறைகள், உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தம்பதிகளுக்கு விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் தம்பதிகளுக்கு விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார்.
பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சதீஷ் டாக்டர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சமூக நல அலுவலர் சகுந்தலா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், இளம் தம்பதியினருக்கு, குழந்தை பேறு, குழந்தை வளர்ப்பு முறைகள், உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.
Next Story






