என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏ.வி.பி. பள்ளியில் அரசியல் அமைப்பு தினம் கொண்டாட்டம்
- இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் குறித்து மாணவர்களது குறுநாடகமும் இடம் பெற்றது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.
திருப்பூர் :
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பற்றிய சிறப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார்.
மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அரசியலமைப்பு சட்டம் குறித்து உரையாற்றினர். மேலும் இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் குறித்து மாணவர்களது குறுநாடகமும் இடம் பெற்றது. அரசியல் அமைப்பு சபையில் பங்கேற்ற தலைவர்கள் போல வேடமணிந்த மாணவர்கள் அந்தந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். பள்ளி தாளாளர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்