search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே சம்பள பாக்கி கேட்டவருக்கு அடி- உதை
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே சம்பள பாக்கி கேட்டவருக்கு அடி- உதை

    • திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகியோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார்.
    • பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வேலப்பகவு ண்டம்பா ளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி( வயது 30). இவர் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக சம்பள பாக்கி இருந்துள்ளது. எனவே சம்பள பாக்கியை கேட்பதற்காக சதீஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. அப்ேபாது சதீஷின் உறவினரான பாலசு ப்பிரமணியம் என்பவர் திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகி யோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார். இதில் ஆறுச்சாமியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாகஅருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் உடனடியாக பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை க்குஅனுப்பிவைக்க ப்பட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்க ன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×