என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2பேர் கைது
- புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், 70 கிலோ குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் போலீசார் மாநகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிவன் தியேட்டர் அருகே போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த பாண்டியராஜ் (வயது 25), வைத்தீஸ்வரன் (48)என்பது தெரியவந்தது. மேலும் இரண்டு பேரும் புகையிலை பொருள்களை காரில் கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், 70 கிலோ குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்