search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த  2பேர் கைது
    X

    கைதானவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களையும் படத்தில் காணலாம்.  

    திருப்பூரில் காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2பேர் கைது

    • புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், 70 கிலோ குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் போலீசார் மாநகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிவன் தியேட்டர் அருகே போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த பாண்டியராஜ் (வயது 25), வைத்தீஸ்வரன் (48)என்பது தெரியவந்தது. மேலும் இரண்டு பேரும் புகையிலை பொருள்களை காரில் கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், 70 கிலோ குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×