என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி கண்ணாடி உடைத்த வாலிபர் கைது
    X

    கல் வீசி தாக்கியதில் உடைந்த வந்தே பாரத் ரெயில் கண்ணாடியை படத்தில் காணலாம்

    வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி கண்ணாடி உடைத்த வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மது போதையில் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    சென்னை சென்ட்ரலிலி ருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் இயக் கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி பிரதமர் மோடி பெங்களூரு ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதன்பிறகு வாரந்தோறும் புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 5.50 மணியளவில் சென்னையில் இருந்துமைசூ ருவுக்கு வந்தேபாரத் எக்ஸ்பி ரஸ் ரெயில் புறப்பட்டது.

    அந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு 7.25 மணியளவில் வந்தடைந்தது. அதன் பிறகு பெங்களூரு நோக்கி புறப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி பகுதியில் உள்ள புதூர் அருகே காலை 8.13 மணியளவில் சென்றபோது திடீரென யாரோ ஒருவர் கல் வீசிவிட்டு ஓடினார்.

    இதனால் ரெயில் பெட்டி கண்ணாடி உடைந்தது. அப் போது ரெயிலில் இருந்த பய ணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த ரெயில் காட்பாடி அடுத்த பெங்களூருவில் தான் நிற்கும் என்பதால் ரெயில் பெங்களூரு சென்றதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் என் ஜின் டிரைவர் புகார் கொடுத் தார். அதன்பேரில் பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சம்பவம் நடந்த இடம் வாணியம்பாடி அருகே இருப்பதால் புகார் மனுவை ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே பாது காப்பு படை போலீசார் வழக் குப்பதிவு செய்து ரெயில் மீது கல் வீசி தாக்கிய வாணியம் பாடி அருகே திருமாஞ் சோலை பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 21) என் வரை கைது செய்து விசா ரணை செய்தனர்.

    விசாரணையில் குபேந்திரன் தான் மது போதையில் அவ்வழியாக சென்று கொண்டு இருந்த வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    மேலும் குபேந்திரன் மீது வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் பைக் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே ஓடு ரெயில் மீது கல் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×