search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    திருப்பத்தூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • தாய் இறந்த சோகத்தில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள புத்தகரம் கிராமம் காலனி பகுதியை சேர்ந்தவர். சதீஷ்குமார் (வயது 23) இவர் மாந்தோப்புகளை குத்தகை எடுத்து பழங்களை விற்பனை செய்து வந்தார்.

    இவரது தாயார் இந்திராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சதீஷ்குமார் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

    நேற்று இரவு வீட்டில் இருந்த சதீஷ்குமார் தனது தாயார் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் வழக்கம் போல கதவை தட்டிய போது திறக்காததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது தூக்கில் தொங்கி கிடந்த சதீஷ்குமாரை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×