என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
- அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
- பரவலான மழையால் முன்னெச்சரிகை நடவடிக்கை தீவிரம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள் ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 28 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஏலகிரிமலை, ஜவ்வாது மலைகளில் கனமழை பெய்து வருகிறது. எனவே, மாவட்டம் முழு வதும் உள்ள நீர்வரத்து கால்வாய் களை தூர்வார வேண்டும். நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ளபெரிய ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. இதையடுத்து, ஏரி பகுதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், பருவமழை தீவிரமடைந்து வருவதால் நீர் நிலைகளை தொடர்ந்து கண் காணிக்க வேண்டும் என அதிகாரி களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, திருப்பத் தூர் நகராட்சி ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை யும், திருப்பத்தூர் வனச்சரக அலு வலக வளாகத்தில் மாவட்ட மைய நூலக கட்டிடம் கட்டுவதற்கானஇடத்தை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைதொடர்ந்து, ஜோலார் பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி, அசோக் நகர் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட் டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை கலெக்டர் ஆய்வு செய்தார். பிறகு, மாணவர்களுக்கு வழங்க தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவை கலெக்டர் பரிசோதனை செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் வளர் மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, திருப்பத் தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்