search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் வழங்ககோரி கிராம மக்கள் சாலை மறியல்
    X

    குடிநீர் வழங்ககோரி கிராம மக்கள் சாலை மறியல்

    • அரசு பஸ் சிறைப்பிடிப்பு- பரபரப்பு
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த வெங்க ளாபுரம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சீரான குடிநீர் வழங்கவில்லை. திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்களாபுரம் அருகே திருப்பத்தூர்- திருவண்ணா மலை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதும க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    Next Story
    ×