என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆசிரியர் அடித்ததில் மாணவி முகத்தில் காயம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப்பகுதியில் உள்ள நெல்லிவாசல் ஊராட்சி, புலியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அன்று பள்ளியில் உணவு உண்ணும் போது அதே பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி வாட்டர் பாட்டிலில் குடிப்பதற்காக தண்ணீர் வைத்துள்ளார்.
அப்போது ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியிடம் எதற்காக வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வைத்துள்ளாய் எனக்கேட்டு மாணவி கன்னத்தில் பிரம்பால் அடித்துள்ளார்.
பள்ளி முடிந்த பின்பு மாணவி மாலை வீட்டிற்கு சென்றார்.
அப்போது அந்த மாணவியின் கன்னத்தில் காயம் இருப்பதை பார்த்த பெற்றோர் இது குறித்து விசாரித்தனர்.
அப்போது மாணவி பள்ளியில் நடந்ததை கூறினார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை, அவரது பெற்றோர் புதூர்நாடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
இதேபோல் அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களையும் அடிப்பதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்