search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட் தீ பிடித்து எரிந்தது
    X

    மொபட் தீ பிடித்து எரிந்தது

    • தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் நேற்று திடீரென ஒரு மொபட்டில் தீ பற்றியது. மளமளவென எரிந்து மொபட் முழுவதும் பரவியது.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீய ணைப்பு வீரர்கள் வந்தனர்.

    ஆனால் தீயணைப்பு வாகனம் அந்த சிறிய தெருவில் செல்ல முடியாததால் தீயணைப்பு துறையினர் மண் மூலம் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×