search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரியைத் தாக்கியவர் கைது
    X

    வியாபாரியைத் தாக்கியவர் கைது

    • இலவசமாக பானிபூரி கேட்டு தகராறு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தண்டபாணி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம உத்தர் மகன் லல்லி (23). இவர் திருப்பத்தூரில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை திருப்பத்தூரைச் சேர்ந்த சஹில் ரகுமான் (31) என்பவர், லல்லியிடம் பானிபூரி வாங்கி சாப் பிட்டுள்ளார்.பின்னர் சஹில் ரகுமானிடம் லல்லி பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து தனக்கு எப்போதும் இலவசமாக பானிபூரி தரவேண்டும் என சஹில்ரகுமான் தெரிவித்தாராம்.

    இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சஹில் ரகுமான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லல்லியை குத்தியுள்ளார்.

    இதுகுறித்து லல்லி அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப்பதிந்து, சஹில் ரகுமானை கைது செய்தனர்.

    Next Story
    ×