என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேஸ்திரியை தாக்கிய லாரி டிரைவர் கைது
- முன் விரோதம் காரணமாக தகராறு
- ெஜயிலில் அடைப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன்மேல் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 46 ). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதி (60). லாரி டிரைவர். என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரம் அடைந்த மதி அருகே இருந்த கம்பால் சத்தியமூர்த்தியின் தலை மீது தாக்கி உள்ளார்.
இதில் சத்தியமூர்த்திக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அருகே இருந்தவர்கள் படுகாயம் அடைந்த சத்தியமூர்த்தியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதியை கைது செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
Next Story






