search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கசிவால் குடிசை வீடு எரிந்தது
    X

    கோப்புப்படம்

    மின்கசிவால் குடிசை வீடு எரிந்தது

    • மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியபோது விபரீதம்
    • தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஓட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மயிலா (வயது 60). இவர் தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது குடிசை வீட்டின் மேலே மின் ஒயர் செல்கிறது. நேற்று அந்த பகுதியில் லேசான காற்று அடித்தது. அப்போது மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியது தீப்பொறி குடிசை வீட்டின் மீது விழுந்தது.

    குடிசை தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீயில் கருகி நாசமானது.

    Next Story
    ×