என் மலர்
உள்ளூர் செய்திகள்

கழிவு நீர் கால்வாய் கட்டும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வு
- அலுவலர்கள் உடன் சென்றனர்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு மாங்கா தோப்பு பகுதியில் உள்ள பாட்ஷா நகரில் 4 தெருக்களுக்கு ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு ெசய்தார். ஆம்பூர் நகர மன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அகமது நகராட்சி ஆணையாளர் சகிலா மற்றும் பொறியாளர் ராஜேந்திரன் ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஆம்பூர் நகர மன்ற துணைத் தலைவரும் நகர செயலாளருமான ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் 22 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் லட்சுமி யுவராஜ் கிளை செயலாளர் விமலநாதன். தொழிலதிபர் அபிப் பாய் அண்ணாமலை சபீர் சுந்தர் மௌலா உள்ளிட்ட பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






