என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஷூ ஏற்றுமதி நிறுவன வியாபாரி கடத்தல்?
Byமாலை மலர்2 July 2022 8:50 AM GMT (Updated: 2 July 2022 8:52 AM GMT)
- கோவை சென்றவர் வீடு திரும்பவில்லை.
- போலீசில் மனைவி புகார்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 35). ஷூ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி உமா சங்கரி (29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் கடந்த 29-ந் தேதி வியாபார சம்பந்தமாக கோயம்புத்தூருக்கு சென்றவர் நேற்று வரை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உமா சங்கரி உதயகுமார் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.
அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று வந்தது.
இது தொடர்பாக ஆம்பூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் கணவர் மாயமானது குறித்து உமா சங்கரி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான உதயகுமாரை யாராவது கடத்தி சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X