search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

    ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
    • 6 மணி நேரம் நடந்ததால் பரபரப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே சின்னவயரிகம் ஊராட்சியில் தனியார் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    கடந்த 2 மாதம் சம்பளம் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    உள்ளிருப்பு போராட்டம்

    இதே உரிமையாளர் நடத்தி வரும் விண்ண மங்கலம் ஊராட்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் கொட்டும் மழையிலும் கடந்த வாரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது 10-ந்தேதிக்கு பிறகு நிலுவையில் உள்ள சம்பளப் பணம் பி.எப், இ.எஸ்.ஐ. மற்றும் ஊழியர்களின் கோரிக்கை யை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலா ளர்கள் உள்ளிருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு 11 மணிக்கு உமராபாத் போலீசார் மற்றும் கம்பெனி நிர்வாகம் தொழிலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்று காலை அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும் என எழுத்து மூலம் தெரிவித்தனர்.

    இதையடுத்து 6 மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்த சென்றனர்.

    Next Story
    ×