என் மலர்
உள்ளூர் செய்திகள்

14 அடி நீள மலை பாம்பு மீட்பு
- சாலையை கடக்க முயன்றபோது பிடிபட்டது
- ஏலகிரி மலை காட்டில் விட்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த ராஜிவ் என்பவர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.
அதேபோல் பொன்னேரியிலிருந்து ஏலகிரி மலை நோக்கி செல்லும் சாலையில் சின்ன பொன்னேரி பகுதியில் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 14 அடி நீளமுள்ள பிடித்து ஏலகிரி மலை காட்டில் விட்டனர்.
Next Story






