என் மலர்
உள்ளூர் செய்திகள்

12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் கொண்டு சென்று விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள பொதியன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது வீட்டு வாசலில் இன்று அதிகாலை 12 அடி நீளமுள்ள மலை பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் சென்று, மலைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
Next Story






