search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலாற்றில் சேதமடைந்த காவிரி கூட்டு குடிநீர் குழாய் சீரமைப்பு
    X

    பாலாற்றில் சேதமடைந்த காவிரி கூட்டு குடிநீர் குழாய் சீரமைப்பு

    • தண்ணீர் வீணாக பாலாற்றில் கலந்தது தடுக்கப்பட்டது
    • சோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது

    ஆம்பூர்:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பாலாற்றில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக் குப்பம் பாலாற்றில் அமைக்கப் பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீர் ராட்சதக் குழாய் கடந்த சில நாட் களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால், தண்ணீர் வீணாக பாலாற்றில் கலந்து ஓடியது.

    இதன் காரணமாக வேலூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் ராணிப்பேட்டை மாவட்ட நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொது மக்களின் குடிநீர் சேவையை கருத்தில் கொண்டு அந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளூர் நீர் ஆதாரங்களைக் கொண்டு தற்காலிகமாக குடிநீர் விநியோகம் செய்து வந்தது.

    இந்நிலையில், பச்சக்குப்பம் ஆம்பூர் பாலாற்றில் சேதமடைந்த குடிநீர் குழாய் சரி செய்யும் பணிகள் தொடங்கின.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குடிநீர் குழாய் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் நேற்று முன்தினம் மாலை முதல் விடிய, விடிய ஈடுபட்டு விரிசலை சரி செய்தனர்.

    இதைத்தொடர்ந்து, சோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு சரி பார்ப்புப்பணிகள் நடைபெற்றன.

    Next Story
    ×