என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி
- பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
- சரி செய்ய கலெக்டரிடம் வலியுறுத்தல்
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த நாட்டறம்பள்ளி ஒன்றியம் கொடையாஞ்சி மற்றும் சுற் றுப்புற கிராமங்களில் இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட் டால் மீண்டும் இரவு முழுவ தும் மின்சாரம் வருவதில்லை. மறுநாள் காலை 9 மணிக்கு தான் மின்சாரம் வருகிறது.
இதனால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின் றனர். அதே நேரத்தில் ஒரு பகுதிக்கு மின்சாரம் வழங்கப் பட்டால் மற்றொரு பகுதிக்கு வழங்குவதில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே மாவட்ட கலெக் டர் பாஸ்கர பாண்டியனுக்கு கிராம மக்கள் இதனை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






