search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
    X

    வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்த காட்சி.

    வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

    • வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஓவிய போட்டிகள் நடைப்பெற்றது.

    திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி முன்னிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே வாக்காளர்கள் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர் இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், தேர்தல் துணை தாசில்தார் நிர்மலா, கல்லூரி முதல்வர் பூங்கோதை, வருவாய் ஆய்வாளர் கவுரி, அக்ரா கரம் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×