என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பெரிய மசூதியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.
திருப்பத்தூரில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை
- ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
- ஏராளமானோர் பங்கேற்பு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர் வாணியம்பாடி ஈத்கா மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டுத் தொழுகைக்கு தடை செய்யப்பட்டிருந்தது.
வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி பண்டிகையை கொண்டாடினர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து இடங்களிலும் கூட்டுத்தொழுகை நடந்ததால் இஸ்லாமியர்கள் உற்சா கத்துடன் காணப்பட்டனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பெரிய மசூதியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜோலார்பேட்டை, இடையம்பட்டி, கடைத்தெரு, பார்சம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு புத்தாடை அணிந்து கொண்டு பெரிய மசூதியில் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். அதன் பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சிக்கு முத்தவலி சங்க தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஜான்பாஷா பொருளாளர் அகமதுல்லா மற்றும் ஆஜு, பையாஸ், அக்பர் உள்ளிட்ட சுமார் 250 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக செய்து இருந்தனர்.






