என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் அருகே வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம்
- டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆம்பூர் அருகே மாராப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன். முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் ஏ.டி.எஸ்.பி. அனைத்து சப் டிவிஷன் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர் கள் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசாருக்கு திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன்.
பரிந்துரையின்படி வேலுர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.