search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
    X

    கோப்புப்படம்

    லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

    • காதல் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி.
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகன் மனோஜ் குமார் (வயது28) இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் மாளவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி, பூக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த அஞ்சலி (26). என்பவரை திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதனையடுத்து இருவரும் அஞ்சலியின் ஊரிலேயே வசித்து வந்தனர்.

    மேலும் இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவரது மனைவி அஞ்சலி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியாக இருந்து வந்த மனோஜ் குமார் இன்று அதிகாலை அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×