search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்
    X

    நாட்றம்பள்ளி பகுதியில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்

    • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் இலவச ஆடுகள் வழங்குவதற்காக 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் விழா நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரே நடைபெற்றது.

    விழாவிற்கு நாட்டறம்பள்ளி ஒன்றியம் குழு தலைவர் வெண்மதி முனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே. பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிங்காரவேலன், நகர செயலாளர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கி பேசினர்.

    Next Story
    ×