search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச கண் சிகிச்சை முகாம்
    X

    இலவச கண் சிகிச்சை முகாம்

    • கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நகர்புற நல வாழ்வு மைய வளாகத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிளியர் வியு கண் பரிசோதனை நிலையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    28-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராஜலட்சுமி ஜெயகாந்தன், 29-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சுபாஷிணி செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ் சாரதிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    இதில் அண்ணா நகர், புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் அறிவழகன், ஜெயாமன், சண்முகம், கார்த்திக், அருண்குமார், அலெக்ஸ் நிர்மல்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×