search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ நாகாலம்மன் கோவிலில் தீ மிதி விழா
    X

    புத்துக்கோவில் அருகே ஸ்ரீ நாகாலம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்த காட்சி.

    ஸ்ரீ நாகாலம்மன் கோவிலில் தீ மிதி விழா

    • ஆடி அமாவாசை முன்னிட்டு நடந்தது
    • பெண்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோவில் அருகே ஸ்ரீ நாகாலம்மன் கோவில் தீ மிதி விழா நடைபெற்றது.

    நாட்டராம்பள்ளி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் அருகே ஸ்ரீ நாகாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி அமாவாசை முன்னிட்டு தீமிதி விழா மற்றும் மாங்கல்ய பூஜை நடைபெற்றது. புத்துக்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ நாகலம்மனை சாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி எடுத்து தீ மிதித்தனர். இந்த திருவிழாவில் ஏராளாமான பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி ஊர் பொதுமக்கள் மிகவும் செய்து இருந்தனர்.

    Next Story
    ×