என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரியில் வேலை வாய்ப்பு முகாம்
    X

    ஏலகிரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்த காட்சி.

    ஏலகிரியில் வேலை வாய்ப்பு முகாம்

    • மலைவாழ் மக்களுக்காக நடந்தது
    • 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் சிறு குறு விவசாயிகளுக்கும், மகளிர் திட்டத்திற்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வட்டாரம் ஏலகிரி மலை ஊராட்சி அளவிலான வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் தேர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஏலகிரி மலை மகளிர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த வேலை வாய்ப்பின் முகாமில் மூலம் சுய வேலைவாய்ப்பு, தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு, 10-ம் வகுப்பிற்கு மேல் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஆகியோர்களுக்கு இந்நிறுவனம் பயிற்சி அளித்து வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நாயுடு ஹால் குரூப்ஸ், சேர்மன் வேணுகோபால், மற்றும் இந்நிறுவன உறுப்பினர்கள், மேலும் மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன், உதவி திட்ட அலுவலர், மற்றும் மகளிர் திட்டக்குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×