search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடி அருகே துரியோதனன் படுகளம்
    X

    வாணியம்பாடி அருகே துரியோதனன் படுகளம்

    • அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது
    • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

    உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், நாடகக் கலை புத்துயிர் பெற வேண்டி மகாபாரத சொற்பொழிவு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து 67 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பொது மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×