என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான லாரி.
லாரிகள் மோதி டிரைவர் சாவு
- சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்தவர் இஷாத் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் அஜிஸ் (45). இவர்கள் இருவரும் சென்னைக்கு செல்வதற்காக லாரியில் மீன் ஏற்றிக்கொண்டு ஆம்பூர் வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வெங்காய லாரி நெடுஞ்சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக மீன் லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதியது. இதில் இஷாத் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அஜித் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியில் சிக்கி இருந்த இஷாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி மருத்துவமனைக்கு வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






