என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மனைவியிடம் பேசியதால் தகராறு
- 2 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வாலிபர். இவரது மனைவியிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அடிக்கடி பேசுவதாக கூறப்படுகிறது. இதனால் வாலிபர் அவரை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் அந்த நபர் வாலிபர் மனைவியுடன் பேசியுள்ளார். வாலிபருக்கும் அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர் வெட்டுக் கத்தியால் அவரை தலையின் பின்புறம் வெட்டியுள்ளார். இதேபோல் அந்த நபர் வாலிபரின் தலையில் கல்லால் குத்தியுள்ளார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இருவரும் தனித்தனியாக நாட்டறம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






