ரெயிலில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்

1800 கிலோ சிக்கியது பறக்கும் படை தாசில்தாரிடம் ஒப்படைப்பு
ரெயிலில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பிளாட்பாரங்களில், ரெயில்களிலும் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையி லிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேசன் அரிசி கடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது இருக்கையின் அடியிலும், கழிவறை பகுதியிலும் சிறு சிறு மூட்டைகளாக 1800 கிலோ ரேசன் அரிசி இருந்தது.

45 மூட்டைகளில் இருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் பறக்கும் படை தாசில்தார் சிவ பிரகாசத்திடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com