என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னை பூச்சி நோய் விழிப்புணர்வு முகாம்
    X

    தென்னை பூச்சி நோய் விழிப்புணர்வு முகாம்

    • வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 600 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதில் பல ஊர்களில் நோய் தாக்குதல் தென்படுகிறது. திருப்பத்தூர் வட்டாரத்துக்குட்பட்ட பெருமாபட்டு, இருனாப்பட்டுகிரா மங்களிலும், கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட மட்றப்பள்ளியிலும் சிவப்பு கூண் வண்டு தாக்கப்பட்ட தென்னைகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    அதைத்தொடர்ந்து அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.

    இந்த விழிப்புணர்வு முகாமில், தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் திலகம், வேளாண் உதவி தரக்கட்டுபாடு அப்துல்ரகுமான், கந்திலி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராகினி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×