search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ மீது கார் மோதி 4 பேர் படுகாயம்
    X

    ஆட்டோ மீது கார் மோதி 4 பேர் படுகாயம்

    • சாலையில் தறிக்கெட்டு ஓடியது
    • கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்

    ஆலங்காயம்:

    சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 42). இவர் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தில் உள்ள தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பத்தினருடன் காரில் வந்தார்.

    பின்னர் இன்று காலை அனைவரும் சென்னை நோக்கி புறப்பட்டனர். கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது புது அருகே வந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறிக்கெட்டு ஓடியது. மேலும் முன்னாள் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தியாகராஜன், அவரது குடும்பத்தினர் சுஜாதா (34), ஜெகதீஸ்வரி (52) மற்றும் ஆட்டோவில் வந்த வாணியம்பாடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அருண்வின்சென்ட் பால் (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான கார் மற்றும் ஆட்டோவை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.

    Next Story
    ×