search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரசார பயணம்
    X

    இளைஞர் பெரு மன்றம் சார்பில் பிரசார பயணம் நடந்த காட்சி.

    இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரசார பயணம்

    • ரூ.10 ஆயிரம் நிவாரணம் கொடுக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற தலைப்பில் இளைஞர் எழுச்சி தொடர் பரப்புரை பயணம் விளக்க கூட்டம் திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

    இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் முரளி தலைமை வகித்தார்.தொடர் பிரசார பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.சி.சாமிக்கண்ணு, எம்.நந்பி, ஆர்.முல்லை, எஸ்ஆர். தேவதாஸ், எம்சி. முருகன், ஆனந்தன், சங்கர் உட்பட பலர் பேசினார்கள்.

    தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வேலை கொடு அல்லது வேலை கொடுக்கிற வரை மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் கொடுக்க வேண்டும்.

    புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்குவதோடு வேலை வாய்ப்புகளில் உள்ளூர் தொழிலா ளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் வேலை வாய்ப்புகளில் ஒப்பந்த மற்றும் அவுட் சோர்சிங் முறையினை ரத்து செய்து, நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி பேசினார்கள்.

    மாதனூரில் தொடங்கிய பிரசார பயணம் சோமலாபுரம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, புதுப்பேட்டை, கந்திலி, வழியாக திருப்பத்தூரில் முடிவடைந்தது கூட்டத்தில் ஏராளமானோல் கலந்து கொண்டனர். இறுதியில் நகர துணைச் செயலாளர் ஆர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×