search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து சிறுவன் பலி
    X

    பாம்பு கடித்து சிறுவன் பலி

    • தாய்க்கு தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சிக்கனாங் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் விவசாயி. இவரது மனைவி தவமணி (வயது 40). இவர்களது மகன் ஹரிஹரன் (17).

    நேற்று இரவு ஹரிகரனும், தவமணியும் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர். அப்போது அதிகாலை வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு இருவரையும் கடித்துள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.

    சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே ஹரிகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தவமணி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×