search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலையில் பைக்குகள் மோதல்
    X

    ஏலகிரி மலையில் பைக்குகள் மோதல்

    • 3 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலி கோட்டை பகுதியை சேர்ந்தவர் முஜித்முல்லா இவரது மகன் மன்சூர் (வயது 20) மற்றும் சோமாலபுரத்தை சேர்ந்த அவரது நண்பர் சுஜாய் (20). ஆகிய இருவரும் நேற்று ஒரே பைக்கிள் ஏலகிரி மலைக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.

    அதன் பின்னர் சுற்றுலா முடிந்து நண்பர்கள் வீடு திரும்பினார். அப்போது ஏலகிரி மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர். 13 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, முன்னாள் சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 3 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரிமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×