என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி மீது பைக் மோதல்
- சிகிச்சை பலனின்றி வாலிபர் சாவு
- வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்றபோது பரிதாபம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வநாதன் வயது (60) இவருடைய மருமகன் கார்த்திகேயன் (25).
2 பேரும் நேற்று முன்தினம் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி பைக்கில் வந்தனர். அப்போது ஆம்பூர் கன்னிகாபுரம் சாலையில் சென்ற மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலே செல்வநாதன் உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் கார்த்திகேயன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரும் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






