search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து திருடிய பலே திருடன் கைது
    X

    வீடு புகுந்து திருடிய பலே திருடன் கைது

    • 15 பவுன் தங்க நகை பறிமுதல்
    • திருடனை பிடித்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஹபிப் ரஹ்மான் மகன் அப்துல் பாஷா (33). இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களை குறி வைத்து தொடர் வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் திருப்பத்தூர் அருகே பாச்சல் மேம்பாலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறித்து சென்றது மற்றும் ஜோலார்பேட்டை, பெரி யகரம், கண்ணாலபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் நகைகளை கொள்ளை அடிப்பது உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்குகளில் தொடர்பு டைய குற்றவாளியை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் சந்தேகமான முறையில் சுற்றித்திரிந்த அப்துல் பாஷாவை டவுன் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

    அவரை திருப்பத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 15, பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பலே திருடன் அப்துல் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்,

    தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பல திருடனை பிடித்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்தார்.

    Next Story
    ×