என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச கியாஸ் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்
- பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் நடவடிக்கை
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கு பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தேயிலை, முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், வனவாசிகள், தீவுகள், நதி தீவுகளில் வசிக்கும் மக்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்), அந்தியோதயா அன்ன யோஜனா ஆகிய திட்டபயனாளிகள், எஸ்.இ.சி.சி. (சமூக பொருளாதார சாதி வாரிகணக் கெடுப்பு -2011) குடும்பத்தினர்கள், 14 அம்ச திட்டத்தின் படி பட்டியலிடப்பட்ட ஏழை குடும்பத்தினர் ஆகியவற்றில் எல். பி.ஜி. இணைப்பு இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்தபெண் கள் https://www.pmuy.gov.in என்ற இணையதளத்திலோ, எரிவாயு முகவர்களை அணுகியோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Next Story






